Friday, June 09, 2006

என் இனிய ப்ளாக் நெஞ்சங்களே

வந்துட்டான்யா...வந்துட்டான்யா. "வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்".. என்னவோ ப்ளாக் எழுதி வருடக் கணக்கில் ஆனமாதிரி ஒரு உள்ளுணர்வு.. என் குரு டுபுக்கு அவர்கள் கூட கமென்ட்டில் வந்து "Time Out" குடுத்து Warn பண்ணக்கூடிய அளவுக்கு இடைவெளி விழுந்து விட்டது. மன்னிக்கவும்.

நல்லா இருக்கீங்களா ?

நான், துணைவி, ஜேஷ்ட குமாரி மற்றும் அனைவரும் நலம். அடிபட்ட விரல் சரியாகி இப்போது கிரிக்கட்டில் அடித்துக்கொண்டு இருக்கிறேன். வாரம் மூன்று நாள் கிரிக்கெட் பயிற்சியில் ...வார இறுதி மேட்ச்சில் என்று காலம், நேரம் வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. சரி வழக்கம் போல் வேலை நேரத்தில் ப்ளாக் எழுதி விடலாம் என்றால் புதிய web assignment வேறு எனக்கு குடுத்து அனுமன் தோளில் இராமரும், இலக்குவனும் உட்கார்ந்து இருந்த மாதிரி டீம் லீடரும், மேனேஜரும் என் தோளுக்கு பின்னால் நின்று மென்னியை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் டீமை இரண்டாக பிரித்து என்னை 20 ஓவர் டீமிற்க்கு "vice captain" என்று பொறுப்பு வேறு. லீக் மேட்ச் வேறு ஆரம்பித்து விட்டது. எல்லா தமிழ் படங்களும் வேறு பார்க்காமல் டிஸ்க்-கில் தூங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதம் எப்படி சென்றது என்று யோசித்தால் இந்த மாதமும் ஓடி விடும். சரி போய் நாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை முதலில் ப்ளாக்கில் தெரிவிக்கலாம் என்று நினைத்து தான் இதை எழுத வந்தேன்.

கூடிய விரைவில் அடுத்த இந்திய விஜயத்தில் (அதாங்க ...ப்ளாக்ல) சந்திக்கலாம் என்று கூறி நன்றியுடன் தற்காலிகமாக விடைபெறுகிறேன்.